புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்பு மீதிகள் கண்டுபிடிப்பு..!

ஆசிரியர் - Editor I
புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் பகுதியில் மனித எலும்பு மீதிகள் கண்டுபிடிப்பு..!

புதுக்குடியிருப்பு - ஆனந்தபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து மனித எலும்பு மீதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் உள்ளது.

இந்நிலையில் ஆனந்தபுரம் கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை இன்று (12) முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு