யாழ்.வடமராட்சி - கரணவாயில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 30 வயதான பெண் உட்பட 3 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - கரணவாயில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 30 வயதான பெண் உட்பட 3 பேர் கைது!

யாழ்.வடமராட்சி - கரணவாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயது பெண்ணும் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுமே கைது செய்யப்பட்டதாக என்று பொலிஸார் கூறினர்.

இளைஞரில் ஒருவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் என்றும் மற்றைய இளைஞரும் பெண்ணும் கரணவாய் – சமரபாகு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். 

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளின் பின் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு