கொதிநீர் பீப்பாய்க்குள் தவறி விழுந்த கைதி மரணம்..!

சிறைச்சாலையில் கொதிநீர் பிப்பாய்க்குள் தவறி விழுந்த கைதி ஒருவர் உயிரிழந்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தொிவித்துள்ளது.
கொதிநீர் பீப்பாயில் வீழ்ந்தமையினால் பாரிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அங்குனுகொலபெலஸ்ஸ பொலிஸார் மற்றும் சிறைச்சாலை திணைக்களம் உத்தியோகத்தர்கள் இணைந்து
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.