லண்டனில் கத்திக் குத்து: மூவர் வைத்தியசாலையில்!! -கைபேசி கொள்ளையை தடுக்க முற்பட்ட போது சம்பவம்-

ஆசிரியர் - Editor II
லண்டனில் கத்திக் குத்து: மூவர் வைத்தியசாலையில்!! -கைபேசி கொள்ளையை தடுக்க முற்பட்ட போது சம்பவம்-

லண்டனில் தொலைபேசி கொள்ளை முயற்சி ஒன்றை தடுக்க முற்பட்ட போது நடத்த கத்திக்குத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 அல்லது 3 இளைஞர்கள் ஒரு நடுத்தர வயதுடைய ஒருவரை பிடிக்க முயற்சித்ததாகவும், முகமூடி அணிந்த ஒருவர் கத்தியுடன் இருந்ததைக் கண்டதாக குறித்த கத்திக்குத்துச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

வியாழன் காலை தாக்குதலின் போது, அவ்வழியாக சென்றவர்கள் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சந்தேகத்திற்கிடமான கொள்ளையாகக் கருதி, இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருவதை பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உயருக்கு ஆபத்து இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு