மீண்டும் வேகம் எடுக்கும் மகாவலி (எல்) வலய நில அபகரிப்பு! தமிழ் தரப்புக்கள் ஓரணியில் நின்று எதிர்க்கவேண்டும் என்கிறார் அங்கஜன்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் வேகம் எடுக்கும் மகாவலி (எல்) வலய நில அபகரிப்பு! தமிழ் தரப்புக்கள் ஓரணியில் நின்று எதிர்க்கவேண்டும் என்கிறார் அங்கஜன்..

வடமாகாணத்தில் தமிழர் நிலங்களை அபகரிக்கும் மகாவலி (எல்) வலயத்தின் கீழான குடியேற்றங்களை தமிழ் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து எதிர்க்கவேண்டும். என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழர் பகுதிகளில் இனப் பரம்பலை மாற்றுவதற்கு ஏற்கனவே திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குகிளாய் ,கொக்குத் தொடுவாய், நாயாறு போன்ற பகுதிகளை மகாவலி அமைச்சின் கீழ் ( L) வலயமாகப் பிரகடனப்படுத்தி குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டங்கள் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்பட உள்ள நிலையில் தமிழ் மக்களின் பாராளுமன்றம் பிரதேச பை மற்றும் உள்ளூர் ஆட்சி மன்ற பிரதிநிதித்துவங்களில் தாக்கத்தை உண்டு பண்ணும்.

குறித்த திட்டம் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் துறைசார்ந்த அமைச்சருக்கு குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த உள்ளேன். ஆகவே குறித்த திட்டத்தின் பாதகத் தன்மைகளை உணர்ந்து

தமிழ் கட்சிகள் ஓரணியில் குரல் கொடுப்பது காலத்தின் தேவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு