தமிழில் இரு பிரம்மாண்ட வசூல் படங்களில் ஐஸ்வர்யா ராய்!!

ஆசிரியர் - Editor II
தமிழில் இரு பிரம்மாண்ட வசூல் படங்களில் ஐஸ்வர்யா ராய்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்குளுக்கு கிடைக்காத ஒரு பெருமையாக இதுவரையில் அதிக பொருட் செலவில் தயாரான இரு பிரம்மாண்டப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளவர் ஐஸ்வர்யா ராய். 

ஒரு படம் 'எந்திரன்'. தமிழில் முதன் முதலில் அதிக வசூலைக் குவித்து லாபத்தைக் கொடுத்த படம். மற்றொரு படம் தற்போது வெளிவந்துள்ள 'பொன்னியின் செல்வன்'.

இரு படங்களிலுமே ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் வழக்கமான கதாபாத்திரங்களை விட மாறுபட்ட கதாபாத்திரங்கள். அவரை விட அதிக வயது கதாநாயகர்களுடன் இரண்டு படங்களிலும் ஜோடி சேர்ந்திருந்தாலும் அவருடைய அழகையும், நடிப்பையும் ரசிகர்கள் ஆராவாரத்துடன் ரசித்துள்ளார்கள். 

'எந்திரன்' சனா கதாபாத்திரமும், 'பொன்னியின் செல்வன் 1' நந்தினி கதாபாத்திரமும் மறக்க முடியாதவை. அடுத்து 'பொன்னியின் செல்வன் 2' மந்தாகினி கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு