சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்!! -சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 9 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
சோமாலியாவில் இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல்!! -சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட 9 பேர் பலி-

சோமாலியா நாட்டில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் இராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து இரு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. 

இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலுக்க அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு