யாழ்.பொதுநுாலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல்! நடத்துனருக்கு 60 ஆயிரம் தண்டம், நீதிமன்றம் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொதுநுாலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல்! நடத்துனருக்கு 60 ஆயிரம் தண்டம், நீதிமன்றம் உத்தரவு..

யாழ்.பொதுநுாலக சிற்றுண்டிச்சாலை நீதிமன்ற உத்தரயையடுத்து சீல்வைத்து மூடப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09.09.2022ம் திகதி யாழ்.பொதுநூலக சிற்றுண்டிச்சாலை சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.

அதன்போது இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு நிவர்த்தி செய்ய காலஅவகாசம் சிற்றுண்டிச்சாலை நடாத்துனரிற்கு வழங்கப்பட்டது. 

மீண்டும் பொது சுகாதார பரிசோதகரால் 28.09.2022ம் திகதி மீள் பரிசோதனை செய்த போது குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் சிற்றுண்டிசாலை நடாத்துனரிற்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சிற்றுண்டிச்சாலை நடாத்துனர் குற்றச்சாட்டுகளை ஏற்றுகொண்டதையடுத்து 60,000/= தண்டம் நீதிமன்றால் விதிக்கப்பட்டதுடன், 

சிற்றுண்டிசாலையினை சீரமைக்கும் வரை சீல் வைக்குமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு