யாழ்.வண்ணார்பண்ணையில் 4 வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்!

ஆசிரியர் - Editor I
யாழ்.வண்ணார்பண்ணையில் 4 வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்!

யாழ்.வண்ணார்பண்ணைப் பகுதியில் நான்கு வீடுகள் மீது நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வண்ணார்பண்ணைப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நவராத்திரியை முன்னிட்டு ஆலயத்துக்காகக் கட்டப்பட்டிருந்த மின் விளக்குகளை மதுபோதையில் சென்ற இருவர் உடைத்த நிலையில், 

அவர்களைக் குறித்த பிரதேச இளைஞர்கள் பிடித்து எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்த ஆறு பேரைக் கொண்ட குழு 

அந்தப் பகுதியிலுள்ள நான்கு வீடுகள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு