தீபிகா படுகோனே வைத்தியசாலையில் திடீர் அனுமதி!!

ஆசிரியர் - Editor II
தீபிகா படுகோனே வைத்தியசாலையில் திடீர் அனுமதி!!

இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று செவ்வாய்க்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டார். 

இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. வைத்தியர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் பதான் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் பைட்டர் படத்திலும், நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு