தல, தளபதி வைத்து இயக்குவதற்கு தயார்!! -இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தல, தளபதி வைத்து இயக்குவதற்கு தயார்!! -இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவிப்பு-

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெங்கட் பிரபு தல, தளபதி வைத்து இயக்குவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைப்பெற்ற குறும்பட விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் வசந்த், வெங்கட் பிரபு சிம்பு தேவன் கலந்துக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இந்த விழாவில் வெங்கட் பிரபு பேசியதாவது, இங்கிருக்கும் எல்லோரும் இந்த மேடையில் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தெலுங்கு எனக்கு தெரியாது. ஆனால், தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ் நடிகர்கள் பலரும் அந்த படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் படம் இயக்குவதன் மூலம் பல அனுபவங்கள் கிடைத்தது.

சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல என்பதற்கு முருகதாஸ் மற்றும் பிரபுதேவா மாஸ்டர் சிறந்த உதாரணம். ஹிந்தியே தெரியாமல் படம் எடுத்து வெற்றி பெற்றார்கள். ஆங்கிலம் சரியாக தெரியாமல் பாலிவுட் படம் வரை செல்கிறார்கள். 

ஆகவே, சினிமாவிற்கு மொழி தடையில்லை. குறும்படம் இயக்குவது மிகவும் கஷ்டம் என்று கூறினார்கள். நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு குறும்படம் இயக்குவது கஷ்டம் தான். ஏனென்றால், 3 நிமிடங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல வேண்டும்.

தல, தளபதி ஒப்புக் கொண்டால் இருவரையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக உள்ளேன். மேலும், எனக்கு மட்டுமில்லை எல்லா இயக்குனர்களுக்குமே ஒரு படத்தைவிட அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு இயக்குனருக்கு முற்றுப்புள்ளியே கிடையாது என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு