இளம் குடும்பஸ்த்தர் கொடூரமாக வெட்டிக் கொலை! 11 மாதங்களின் பின் பிரதான சந்தேகநபர் சிக்கினார்..

ஆசிரியர் - Editor I
இளம் குடும்பஸ்த்தர் கொடூரமாக வெட்டிக் கொலை! 11 மாதங்களின் பின் பிரதான சந்தேகநபர் சிக்கினார்..

கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 16ம் திகதி 27 வயதான முத்தையா கேதீஸ்வரன் (வயது27) என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 

நவம்பர் மாதம் 17ம் திகதி சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியம் 

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் முன் நிலையில் சடலம் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டப்பட்டது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்து.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 11மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்

நேற்றைய தினம் விசேட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவரை இன்று நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு