யாழ்.ஆறுகால்மடத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு! வாள்கள், கசிப்புடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆறுகால்மடத்தில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சுற்றிவளைப்பு! வாள்கள், கசிப்புடன் ஒருவர் கைது..

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் கசிப்பு மற்றும் வாள்களுடன் ஒருவர் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ் ஆறு கால் மடம்பகுதியில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது சுமார் ஆறு போத்தல் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடா மற்றும் வாள்களுடன் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு