யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 26 பேர் யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி - மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 26 பேர் யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கைது!

சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்த 26 பேர் நேற்றைய தினம் யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான பல நாள் படகு செல்வதை அவதானித்து அதனை சோதனையிட்டபோதே சட்டவிரோதமாக புலம் பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்க்கு உட்பட்ட நான்கு பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட 26 பேரும் கைப்பற்றப்பட்ட படகும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் உரிய சட்ட நடவடிக்கைக்காக.

மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு