கிளிநொச்சியை சேர்ந்தவருக்கு மல்லாவியில் கத்திக்குத்து!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியை சேர்ந்தவருக்கு மல்லாவியில் கத்திக்குத்து!

இரு தரப்பினர் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்த நிலையில் காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மல்லாவியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஆனைவிழுந்தானை சேர்ந்த கு.விஜயதாஸ் (வயது33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில் மல்லாவியை சேர்ந்த 42 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவருக்கிடையிலான வாய்த்தர்க்கமே கத்திக்குத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. 

மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு