பாலியல் குற்றச்சாட்டு!! -கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது-

ஆசிரியர் - Editor II
பாலியல் குற்றச்சாட்டு!! -கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது-

கனடா நாட்டில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 

பர்லிங்டன் நகரை சேர்ந்த 23 வயதான சுக்கிரன் ஸ்ரீதரன் என்பவரே மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

அங்குள்ள ஆல்டர்ஷாட் உயர்நிலைப் பள்ளி பகுதியில் திங்கள்கிழமை இந்தச் சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகின்றது. அன்றைய தினம் வாகனம் ஒன்றில் வந்த சந்தேகநபர் உயர்நிலைப் பாடசாலை பெண்களை பாலியல் ரீதியாக முன்னிறுத்தி அந்தப் பகுதியில் வாகனம் ஓட்டிச் செல்வது' குறித்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியாக தூண்டியமை உட்பட அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் ஆளில்லாமல் இருப்பதைக் கண்டதாக ஹால்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு