இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் வடமாகாண மக்களுக்கு அரச காணி மற்றும் வீட்டுத்திட்டத்திற்கு அதிக நிதி! ஆளுநர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் வடமாகாண மக்களுக்கு அரச காணி மற்றும் வீட்டுத்திட்டத்திற்கு அதிக நிதி! ஆளுநர் அறிவிப்பு..

இந்தியாவில் இருந்து நாடு வடமாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணி வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபுப்புரை வழங்கியுள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் நாட்டில் சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர்.

ஏற்கனவே ஒரு பகுதியினர் இலங்கைக்கு திரும்பியுள்ள நிலையில் படிப்படியாக தாய்நாட்டுக்கு வருகைதரும் வர்களுக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

வருகை தரும் குடும்பங்களில் காணி அற்றவர்களுக்கு அரச நிலம் பகிர்ந்தளிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவிலிருந்து வருகை தரும் இலங்கை மக்களுக்கு 

இந்திய அரசு வழங்கும் வீட்டுத் திட்டத்தின் நிதியை அதிகரிக்குமாறு இந்திய அரசை கேட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு