மது போதையில் தாயுடன் தகராறு!! -தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்-

ஆசிரியர் - Editor II
மது போதையில் தாயுடன் தகராறு!! -தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்-

சென்னை அமைந்தகரையில் மது போதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையின் கழுத்தை அறுத்த மகன் பொலிஸாரிடம் சரண் அடைந்தார்.

செனாய் நகரைச் சேர்ந்த சாகுல்அமீது என்பவருக்கு மனைவி மற்றும் சதாம் உசேன் என்ற மகன் உள்ளனர். சாகுல் அமீது தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் மனைவி, மகன் ஆகியோரை அடித்து, உதைத்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த சாகுல் அமீது தனது மகன் மற்றும் மனைவியிடம் மது போதையில் தகராறு செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சதாம் உசேன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தந்தையின் கழுத்தை அறுத்து விட்டு அமைந்தகரை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு