பாடசாலை கழிவறையில் சிகரெட்டை ஊதி தள்ளிய மாணவிகள்!! -நேரில் பார்த்த மற்றொரு மாணவிக்கு செய்த கொடுமை-

ஆசிரியர் - Editor II
பாடசாலை கழிவறையில் சிகரெட்டை ஊதி தள்ளிய மாணவிகள்!! -நேரில் பார்த்த மற்றொரு மாணவிக்கு செய்த கொடுமை-

இந்தியாவின் கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் ஓணம் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொல்லம் நகர் பகுதியில் உள்ள பிரபலமான அரச பெண்கள் பாடசாலையில் நேற்றுமுன்தினம் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலவித கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

மாலை 4 மணி அளவில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாடசாலையில் கழிவறைக்கு சென்றார். அங்கு 10 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தனர். 

ஒரே சிகரெட்டை 4 பேரும் மாற்றி, மாற்றி பிடித்து புகை விட்டுக் கொண்டு இருந்ததை பார்த்ததும் 7 ஆம் வகுப்பு மாணவி அதிர்ச்சி அடைந்தார். மற்றொரு மாணவி தங்களை பார்த்து விட்டாரே என 10 ஆம் வகுப்பு மாணவிகளும் பதட்டம் அடைந்தனர்.

அவர்கள் இந்த விடயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என 7 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டினர். மேலும் யாரிடமும் அவர் சொல்லி விடக்கூடாது என்ற அச்சத்தில் அந்த மாணவியின் தலைமுடியை கத்தரியால் எடுத்து வெட்டி விட்டனர்.

அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளார். இந்த விவகாரம் பாடசாலை முழுவதும் பரவியதை தொடர்ந்து கொல்லம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பொலிஸார் பாடசாலைக்குச் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கல்வி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட 10 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு