தென்னிலங்கை இனவாதிகள் தீர்வை குழுப்புவார்களா? என சந்தேகிக்கிறோம்...

ஆசிரியர் - Editor I
தென்னிலங்கை இனவாதிகள் தீர்வை குழுப்புவார்களா? என சந்தேகிக்கிறோம்...

பயனுள்ளதும், தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இன வாதிகள் இடமளிப்பார்களா? என தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு சந்தேகம் இருப்பதாக நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா கூறியுள்ளார். 

புதிய அரசியலமைப்புக்கான உருவாக்க பணிகள் குறித்து மாவை சேனாதிராஜாவிடம் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மாவை சேனாதிராஜா மே ற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

புதிய அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவில் சிறீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்துள் ளதாக அறிய முடிகிறது. எமது கட்சிசார்பில் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளனர். 

நேற்று கூட்டம் நடைபெற்றது. ஆயினும் காலநிலை சீரின்மையால் நான் யாழ்ப்பாணம் திரும்பவேண்டியிருந்ததால் நேற்றய கூட்டம் தொடர்பாக அறிய முடியவில்லை. ஆனால் அண்மைய செய்திகளை அவதானிக்கும்போது பெரும்பான்மையான 

ஒத்துழைப் புடன் புதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றுக்கு கொண்டுவரப்படும் என நாங்கள் நம்புகிறோம். ஆனாலும் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் அல்லது தமிழ் மக்கள் விரும்பும் வகையிலான தீர்வு ஒன்று வருவதற்கு தென்னிலங்கையில் 

உள்ள இனவாதிகள் அல்லது எதிரணியில் உள்ளவர்கள் எந்தளவுக்கு இடமளிப்பார்கள்? என்பதில் எமக்கு பாரிய சந்தேகம் அல்லது அச்சம் உள்ளது. ஆகவே பொறுத்திருந்தே சில விடயங்களை பார்க்கவேண்டியுள்ளது என மாவை சேனாதிராஜா மேலும் கூறினார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு