மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் இல்லை!! -திருமண விருந்தில் கோஷ்டி மோதல்-

ஆசிரியர் - Editor II
மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் இல்லை!! -திருமண விருந்தில் கோஷ்டி மோதல்-

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திருமண விருந்தில் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு சபையில் அப்பளம் கொடுக்காததால் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் ஆலப்புழா அருகில் உள்ள ஹரிப்பாடு பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு:-

ஹரிப்பாடு முட்டம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்து மண்டபத்தில் விருந்து ஆரம்பமாகியது. அப்போது பந்தி பரிமாறியவர்கள் மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு அப்பளம் வைக்கவில்லை. இதனை ஒருவர் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மாப்பிள்ளையின் நண்பர்களுக்கே அப்பளம் இல்லையா? என்று மாப்பிள்ளையின் உறவினர்களும் அங்கே திரள, விருந்து நடந்த மண்டபம் களேபரமானது. அப்போது மாப்பிள்ளை தோழர் ஒருவர் மேஜை, நாற்காலிகளை அடித்து உடைக்க அதனை பெண் வீட்டாரும், மண்டப ஊழியர்களும் தட்டி கேட்டனர்.

இதில் பிரச்சினை பெரிதாக அங்க கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாறிமாறி இரு தரப்பினரும் மோதி கொள்ள மண்டப ஊழியர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு மண்டபத்தில் இருந்த உறவினர்கள் சிதறி ஓடினர்.

தகவல் அறிந்து அப்பகுதி பொலிஸார் மண்டபத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு