கார் ஒன்றில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் மீட்பு! பெண்ணின் தாய் உட்பட 6 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
கார் ஒன்றில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் மீட்பு! பெண்ணின் தாய் உட்பட 6 பேர் கைது..

தாயின் ஒத்துழைப்புடன் காதலனுடன் சென்ற இளம்பெண் கடத்தப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் திருகோணமலையில் தங்கியிருந்த இளைஞனும், யுவதியும் கைது செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண்ணின் தாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 17.08.2022ம் திகதி குமுழமுனை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இந்த சம்பவத்திற்கு உதவிய 3 இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்தனர். 

பின்னர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண்ணும் கடத்தியதாக கூறப்பட்ட இளைஞனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருப்பதை பொலிஸார் அவதானித்தது தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளில் கடந்த 27ம் திகதி திருகோணமலையில் தங்கியிருந்த இளைஞனையும், இளம் பெண்ணையும் கைது செய்தனர். 

மேலும் இளம்பெண்ணின் தாயார் உட்பட 6 பேரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் செப்ரெம்பர் 1ம் திகதிவரை அவர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயின் வற்புறுத்தினாலேயே அவர் இனைஞனுடன் சென்றதாக கூறப்படுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு