பிரித்தானியாவில் பெரும் தொகை பண மோசடியில் சிக்கிய இலங்கை பெண்!!

ஆசிரியர் - Editor II
பிரித்தானியாவில் பெரும் தொகை பண மோசடியில் சிக்கிய இலங்கை பெண்!!

பிரித்தானியாவில் இயங்கிவரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் அலுவலக மேலாளராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் 14,000 பவுண்டுக்கும் அதிகமான தொகையை கையாடல் செய்து சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கையாடல் செய்த அத் தொகையில் அவர் தமது சிகிச்சை, கவுன்சில் வரி மற்றும் பல்கலைக்கழகத்தில் அவரது மருமகனுக்கு நிதியளிக்கவும் பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் இல்லாத ஒரு தொண்டு நிறுவனத்தில் மிலந்தி வெலமேதகே என்னும் அவர் அலுவலக மேலாளராக 2000 ஆண்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்காக சுமார் 1,725 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளார். மேலும் நியூகேஸில் நகர சபைக்கு அனுப்பப்பட்ட காசோலைகள் உட்பட, அவரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மொத்தமாக 69 காசோலைகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 2013 மற்றும் ஜூலை 2014 வரையான காலகட்டத்தில் மொத்தம் 14,535 பவுண்டுகள் தொகையை குறித்த தொண்டு நிறுவனத்தில் இருந்து மோசடி செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த மோசடி செய்யப்பட்ட தொகையில் பல்கலைக்கழக கல்விக்காக இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்துள்ள மருமகனுக்கும், தனது சிகிச்சைக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். நியூகேஸில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கடந்த மாதம் குற்றவாளி என கண்டறியப்பட்டார். 

தற்போது 58 வயதாகும் மிலந்திக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனையும் 60 மணி நேரம் ஊதியமற்ற பணி செய்யவும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு