வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்! உழவு இயந்திரத்திற்கும் தீவைப்பு..

ஆசிரியர் - Editor I
வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம்! உழவு இயந்திரத்திற்கும் தீவைப்பு..

வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் உழவு இயந்திரத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் புதுக்குடியிருப் ரெட்பானா - வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள் வெட்டுக் குழுவினரால் தாக்குதல் நடத்தியதுடன், உழவியந்திரம், 

வீடுட்க்கு தீ வைத்தும் வாளால் வெட்டியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளே தனித்திருந்த நிலையில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மூவர் கொண்ட குழுவினரே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு