3 மாத சிசுவுடன் 3 நாட்களாக மணல் திட்டில் அந்தரித்த 8 பேர் தமிழக கடலோர காவல் படையினால் மீட்பு!

3 மாத கைக்குழந்தையுடன் 3 நாட்களாக மணல் திட்டு ஒன்றில் தஞ்சமடைந்திருந்த 8 பேர் தமிழக கடலோர காவல் படையினால் மீட்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மூன்றாம் மணல் தீடையில் இரண்டரை மாத கை குழந்தையுடன் எட்டு நபர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பசியும் பட்டினியுமாக கை குழந்தையுடன் தண்ணீர் மட்டும் குடித்து மூன்று நாட்களாக மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை
இந்திய கடலோர காவல்படை மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.மேலும் ஏற்கனவே இலங்கையில் இருந்து வாழ வழியின்றி 134 நபர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சம் அடைந்தவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் மரைன் பொலிஸார் அவர்களை விசாரணை நடத்தி
மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.