தமிழகம் தூத்துகுடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
தமிழகம் தூத்துகுடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு யாழில் அஞ்சலி..

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி நினைவேந்தல் யாழ் வடமராட்சி,பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் யுன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்ப்பாட்டில் குறித்த மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த மக்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்த அதே வேளை மக்களை படைகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி சுட்டுப் படுகொலை செய்துள்ளமையையும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு