கென்யாவின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் ரூடோ தெரிவு!!

ஆசிரியர் - Editor II
கென்யாவின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் ரூடோ தெரிவு!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியினர் குற்றம் சாட்டினர். ஒடிங்காவின் பிரச்சாரத்தில் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் அறிவிப்பு தாமதமானது.

இந்நிலையில், கென்யா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட துணை ஜனாதிபதி வில்லியம் ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 50.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு