1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி!! -75 வருடங்களாக பாதுகாத்து வரும் முதியவர்-

ஆசிரியர் - Editor II
1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி!! -75 வருடங்களாக பாதுகாத்து வரும் முதியவர்-

இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலையிலும் நேற்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. 

ஆனால் அந்தப் பாடசாலையில் ஏற்றப்பட்ட தேசிய கொடி, 75 ஆண்டுகளுக்கு முன்பு, தலதவாடியில் உள்ள ஒரு பாடசாலையில் ஏற்றப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

அதாவது குறித்த பாடசாலையில், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் திகதி நள்ளிரவு தேசிய கொடி ஏற்றப்பட்டு இருந்தது. 

அந்த தேசிய கொடியை பாடசாலை ஆசிரியரிடம் இருந்து, அதே கிராமத்தை சேர்ந்த கங்காதர் நரசிங்கராவ் குல்கர்னி என்பவர் வாங்கியுள்ளார். தற்போது அவருக்கு 91 வயதாகிறது. 1947 ஆம் ஆண்டு அந்த பாடசாலையில் படித்த போது, கங்காதரிடம் தேசிய கொடியை ஆசிரியர் கொடுத்திருந்தார். அதன்பின் அந்த தேசிய கொடியை கங்காதர் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது 1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட, அந்த தேசிய கொடியை எடுத்து தனது வீட்டில் கங்காதர் ஏற்றி மரியாதை செலுத்துவார். சுதந்திர தின பவள விழா காரணமாக தான் 75 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் அந்த தேசிய கொடியை பாடசாலையில் ஏற்றுவதற்காக கங்காதர் கொடுத்துள்ளார். 

இதையடுத்து, அந்தப் பாடசாலையில் நேற்று 1947 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 75 ஆண்டுகள் தனிச்சிறப்பு பெற்ற தேசிய கொடியை பாடசாலையில் ஏற்றியதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்த தேசிய கொடியை 1947 ஆம் ஆண்டு 25 பைசா கொடுத்து கங்காதர் வாங்கி இருந்தார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக தனது வீட்டில் அந்த தேசிய கொடியை வைக்காமல், தலதவாடி கிராமத்தில் உள்ள வங்கியின் லொக்கரில் அவர் வைத்திருக்கிறார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு