அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் காயம்! நல்லுாரில் உள்ள பாடசாலை ஒன்றில் சம்பவம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை..

ஆசிரியர் - Editor I
அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் காயம்! நல்லுாரில் உள்ள பாடசாலை ஒன்றில் சம்பவம், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை..

14 வயதான பாடசாலை மாணவன் மீது அதிபர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

யாழ்.நல்லுார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லுார் - விநாயகர் வீதியை சேர்ந்த 14 வயதான மாணவன் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். 

தான் கொடுத்த பணியை செய்யவில்லை என்பதற்காக அதிபர் குறித்த மாணவனை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் மாணவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், 

உடல், உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு