கட்டுப்பாடற்ற வேகத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 4 பேர் படுகாயம்..

வேக கட்டுப்பாட்டினை இழந்த தனியார் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்து சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நுவரெலியா - லபுக்கலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 

பஸ்ஸில் 30இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு