இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்.இந்திய துணைத் துாதரகத்தில்..

ஆசிரியர் - Editor I
இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்.இந்திய துணைத் துாதரகத்தில்..

இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் யாழ்.இந்திய துணை துாதரகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. 

யாழ்.மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணிக்கு இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு