பங்களாதேஷ் ரி-20 அணித்தலைவராக ஷகிப் அல் ஹசன்!!

ஆசிரியர் - Editor II
பங்களாதேஷ் ரி-20 அணித்தலைவராக ஷகிப் அல் ஹசன்!!

பங்களாதேஷ் ரி-20 கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் ஷகிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஆசிய கிண்ணம், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் மற்றும் ரி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார்.

அந்நாட்டின் தேசிய கிரிக்கட் சபை அறிக்கை ஒன்றை விடுத்து மேற்படி விடயத்தினை இதனைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள 17 பேர் கொண்ட அணியின் விபரத்தையும் பங்களாதேஷ் கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

இந்த தொடரில் பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸூக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளமையில் ஆசிய கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு