கோலிக்கு ஆதரவு தெரிவித்த மஹல-

ஆசிரியர் - Editor II
கோலிக்கு ஆதரவு தெரிவித்த மஹல-

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் ஒருவரான விராட் கோலி அண்மைக்காலமாக தனது துடுப்பாட்டத்தில் நல்ல நிலையில் பிரகாசித்திருக்கவில்லை.

33 வயதான அவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின் இதுவரை சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தது இல்லை. இதனால் இந்திய அணி விளையாடிய சில தொடர்களில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது துடுப்பாட்ம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்று இலங்கை முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட் கோலி தற்போது எதிர் கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் தரமான ஆட்டக்காரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான திறமைகளை பெற்றவர்.

கடந்த காலங்களில் அவர் இது மாதிரியான சூழ்நிலையை கடந்து வந்துள்ளார். அதே போல விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு