பெற்றோல் திருடும்போது வெளிச்சம் போதாமையால் தீக்குச்சியை பற்றவைத்த 15 வயது திருடன்! பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், மடக்கி பிடித்து கவனித்த பொதுமக்கள்...

ஆசிரியர் - Editor I
பெற்றோல் திருடும்போது வெளிச்சம் போதாமையால் தீக்குச்சியை பற்றவைத்த 15 வயது திருடன்! பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள், மடக்கி பிடித்து கவனித்த பொதுமக்கள்...

பெற்றோல் திருடும்போது வெளிச்சம் போதாமையால் தீக்குச்சியை பற்றவைத்த திருடன் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான். 

குறித்த சம்பவம் விசுவமடு - வள்ளுவர்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 15 வயதான திருடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியான திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

நேற்று அதிகாலை வீடொன்றுக்குள் நுழைந்த திருடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 லீற்றர் பெற்றோலை திருடியுள்ளான். பின்னர் அங்கு நின்ற பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிளில் பெற்றோலை திருட முயற்சித்தபோது வெளிச்சம் போதவில்லை. 

இந்நிலையில் அருகில் பெற்றோல் இருப்பதையும் மறந்து தீக்குச்சி ஒன்றை பற்ற வைத்த நிலையில் பெற்றோல் தீப்பற்றி மோட்டார் சைக்கிள் மீதும் தீ பற்றியுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அயலவர்கள் சுதாகரித்துள்ளனர். 

எனினும் திருடன் தப்பி ஓடிய நிலையில் அவனை தேடிய பொதுமக்கள் அருகில் உள்ள பற்றைக் காட்டில் மறைந்திருந்த நிலையில் மடக்கிப் பிடித்து கவனித்த பின்னர் கட்டிவைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் 15 வயதான திருடனை கைது செய்ததுடன், எரிந்த மோட்டார் சைக்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு