தற்கொலைக்கு முயற தீபிகா படுகோனே!!

ஆசிரியர் - Editor II
தற்கொலைக்கு முயற தீபிகா படுகோனே!!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை விளக்கியுள்ளார். மனநலம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ள நடிகை தீபிகா படுகோனே, மன அழுத்தத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையுடன், தன் குடும்பத்தின் ஆதரவுடன், எவ்வாறு மன அழுத்தத்தை கடந்து வந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன், தூங்கிக் கொண்டே இருப்பேன். தூங்குவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று முயற்சிப்பேன். 

சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். என்னுடைய தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும். 

நான் சினிமா தொழிலில் புகழின் உச்சியில் இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று காரணமே இல்லாமல் நான் உடைந்து விடுவேன். இதனால் தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளை முறையாக பெற்று வந்தேன். முதலில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற தயக்கமாக இருந்தது. ஆனால் நான் மனப்போராட்டங்களை கடந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன் என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு