ஒன்றன் பின் ஒன்றாக துடிதுடித்து இறந்த 3000 வாத்துக்கள்!! -ஏரியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் இந்த நிலை-

ஆசிரியர் - Editor II
ஒன்றன் பின் ஒன்றாக துடிதுடித்து இறந்த 3000 வாத்துக்கள்!! -ஏரியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் இந்த நிலை-

இந்தியா ஆந்திரா மாநிலத்திற்கு அருகே மேய்ச்சலுக்கு சென்ற 3000 வாத்துக்கள் ஏரியில் விஷம் கலந்த தண்ணீர் குடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 

குறித்த மாநிலம் திருப்பதி அடுத்த கப்ப கூடகம் பகுதியை சேர்ந்தவர் ஒருவர் 3 ஆயிரம் வாத்துக்களை வளர்த்து வந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை பக்கத்து கிராமமான ராவுல பாடு ஏரியில் 3 ஆயிரம் வாத்துக்களையும் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது ஏரியில் இருந்த தண்ணீரை குறித்த 3 வாத்துகளும் திடீரென துள்ளி விழுந்து பரிதாபமாக இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ஏரியில் வளர்த்து வந்த மீன்களை பிடிப்பதற்காக அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு சிறிதளவு தண்ணீரில் மீன் பிடித்து உள்ளனர்.

ஏரியிலிருந்த தண்ணீரில் மர்ம நபர்கள் விஷத்தை கலந்து உள்ளனர். விஷம் கலந்த தண்ணீரை குடித்த வாழ்த்துக்கள் இறந்தது தெரிய வந்தது. தண்ணீரை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு