உயிர்மூச்சு வழங்கியது இந்தியா..! நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருக்கம்...

ஆசிரியர் - Editor I
உயிர்மூச்சு வழங்கியது இந்தியா..! நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருக்கம்...

இலங்கை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி தனது கொள்கை உரையை நிகழ்த்தும்போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும்போது இந்தியா வழங்கிய உதவிகளையம் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி தனது கொள்கை உரையின் போது குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு