இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல், ஒருவர் வெட்டிக் கொலை..!

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல், ஒருவர் வெட்டிக் கொலை..!

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 32 வயதான இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் முள்ளியவளை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

அது பின்னர் வாள்வெட்டாக மாறியுள்ளது. இதன்போது 32 வயதான பெருமாள் சதீஸ்வரன் என்ற இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

பின்னர் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதும் பொலிஸார் அங்கு வரவேயில்லை. 

என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு