தமிழ் இன விடுதலை கனவுடன் தம் உயிரை ஆகுதியாக்கியவர்களின் கனவுகள் ஒருநாள் நனவாகும். இரா.சம்மந்தன் கூறுகிறார்.

ஆசிரியர் - Editor I
தமிழ் இன விடுதலை கனவுடன் தம் உயிரை ஆகுதியாக்கியவர்களின் கனவுகள் ஒருநாள் நனவாகும். இரா.சம்மந்தன் கூறுகிறார்.

தமிழ் மக்களுடைய விடுதலை கனவுடன் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கியவர்களின் கனவுகள் நிச்சயம் ஒருநாள் நனவாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். 

மே-18ம் திகதி நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் படு கொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நடைபெற்றிருந்தது. இந்நிலையிலேயே எதி கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது விடயமாக இரா.சம்மந்தன் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில், தமிழ் இனத்தின் விடுதலை கனவுடன் ஆயிரம் ஆயிரம் வேங்கைகளும், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் தங்கள் உயிர் களை ஆகுதியாக்கினார்றகள். அவர்களுடைய கனவுகள் ஒருநாள்

நிச்சயமாக நிறைவேறும். அதனையே முள்ளிவாய்க்கால் மண்ணில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற நி னைவேந்தலில் ஓரணியில் கூடியிருந்த பெருமளவான தமிழ் மக்கள் காட்டியுள்ளனர் என சம்மந்தன் மேலும் கூறியுள்ளார்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு