தனது நிலத்தை விடுவிக்ககோரி போராட்டம் நடத்திய பெண்ணின் வீட்டு சமையலறையில் துப்பாக்கி ரவைகள்! அதிகாலையில் அதிர்ச்சி..

ஆசிரியர் - Editor I
தனது நிலத்தை விடுவிக்ககோரி போராட்டம் நடத்திய பெண்ணின் வீட்டு சமையலறையில் துப்பாக்கி ரவைகள்! அதிகாலையில் அதிர்ச்சி..

நில விடுவிப்புக்காக போராட்டம் நடத்திவரும் இந்திராணி என்பவருடைய வீட்டில் இன்று காலை பாத்திரம் ஒன்றில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் காணப்பட்டமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

உணவுப்பொதியாக இருக்கும் என நினைத்து அதனை அவர்கள் எடுத்து பார்த்தபோது அதற்குள் துப்பாக்கி ரவைகள் கணப்பட்டுள்ளன. அனைத்தும் புதியதுப்பாக்கி ரவைகளாக காணப்படுவதுடன் 

இதனை யார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அச்சமடைந்த குடும்பத்தினர் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

கேப்பாபிலவு பகுதியில் நீண்டகாலமாக படையினர் வசம் உள்ள தங்கள் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் மேற்கொண்டுவரும் இந்திராணி என்பரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கேப்பாபிலவு படை முகாமிற்கு முன்னால் உள்ள இவர்களின் வீடு மற்றும் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளபோதும் மற்றுமொரு இவர்களின் பூர்வீக காணியில் படையினர் ஆக்கிரமித்து 

அங்கிருக்கும் வளங்கள் படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னிலையில் கடந்த காலங்களில் தங்களின் காணிக்காக போராடிவந்த இவர்கள் இன்றும் தங்கள் சொந்த காணிகளில் 

இருந்து படையினரை வெளியெற்றி தங்கள் கணிகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்கள் இந்நிலையில் இவரின் வீட்டிற்குள் எவ்வாறு துப்பாகி ரவைகள் வந்தன என்பது 

ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திராணி தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு