வீடு செல்ல அம்புலன்ஸ் இல்ல!! -இறந்த 2 வயது தம்பி உடலுடன் வீதியில் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்-

ஆசிரியர் - Editor II
வீடு செல்ல அம்புலன்ஸ் இல்ல!! -இறந்த 2 வயது தம்பி உடலுடன் வீதியில் அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்-

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வீதியோரத்தில் 2 வயது தம்பியின் இறந்த உடலை மடியில் வைத்து கண்ணீருடன் உட்கார்ந்திருந்த 8 வயது சிறுவனின் நிலையைப் பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தில் , மொரேனா மாவட்டம் அம்பா கிராமத்தில் வசிக்கும் பூஜாராம் என்வருக்கு குல்ஷன்8 ராஜா2 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உள்ளூர் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிகிச்சை வழங்கய வைத்தியர்கள் 30 கி.மீ. தூரத்தில் உள்ள மொரேனா மாவட்ட வைத்தியசாலைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.

பூஜாராம் தன் இரு மகன்களுடன் மொரேனாவுக்கு வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தான். கதறி அழுத பூஜாராம் உடலை எடுத்துச் செல்ல நோயாளர்காவு வண்டியை கேட்டார். ஆனால் வைத்தியசாலை நிர்வாகிகள் மறுத்து விட்டனர். 

தனியார் நோயாளர்காவு வண்டிகளும் 1500 ரூபாய் கேட்டதால் பூஜாராமல் அதை கொடுக்க முடியவில்லை. வைத்தியசாலைக்கு வெளியே வீதியோரத்தில் குல்ஷன் மடியில் ராஜா உடலை கிடத்தி வைத்து விட்டு வாகனம் ஏதாவது கிடைக்குமா என தேடிப் போனார்.

தம்பியின் உடலை சுற்றும் ஈக்களை விரட்டிக் கொண்டு கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்து பதிவிட்டார். அதைப் பார்த்த பொலிஸ் அதிகாரி யோகேந்திர சிங் விரைந்து வந்தார். 

மாவட்ட வைத்திசாலைக்குச் சென்று அங்கிருந்த அதிகாரிகளை எச்சரித்தார். இதையடுத்து பூஜாராமுக்கு நோயாளர்காவு வண்டி வழங்கப்பட்டது. தம்பி உடலுடன் கண்ணீருடன் குல்ஷன் அமர்ந்திருந்த படத்தை பார்த்து ஏராளமானோர் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு