யாழ்.மாவட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தும் கூலி தொழிலாளிகளுக்க எரிபொருள்! மாவட்டச் செயலகம் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இயந்திரங்களை பயன்படுத்தும் கூலி தொழிலாளிகளுக்க எரிபொருள்! மாவட்டச் செயலகம் நடவடிக்கை..

இயந்திரங்களை பயன்படுத்தி தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் 25 பேருக்கு எரிபொருளுக்கான டோக்கன்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தொிவிக்கையில், 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனையால் பல்வேறு தரப்பினரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்கள் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற எரிபொருள் பகிரப்படுகின்றது.

இந்நிலையில் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வரும் சுமார் 25 கூலி தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். 

தொடர்ச்சியாக இதுபோன்ற கூலி தொழிலாளர்களுக்கு பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு