யாழ்.சத்திரத்து சந்தியில் பொலிஸார் - இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சத்திரத்து சந்தியில் பொலிஸார் - இராணுவ புலனாய்வு பிரிவினர் அதிரடி! ஒருவர் கைது..

யாழ்.சத்திரத்து சந்தியில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இன்று மாலை நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 

ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. 

ந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு