இளைஞர்கள் மூவரை டிப்பர் வாகனத்தில் கடத்திச் சென்று மூர்க்கத்தனமான தாக்குதல்..! பொலிஸார் நுழைந்ததால் கடத்தல் கோஷ்டி தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
இளைஞர்கள் மூவரை டிப்பர் வாகனத்தில் கடத்திச் சென்று மூர்க்கத்தனமான தாக்குதல்..! பொலிஸார் நுழைந்ததால் கடத்தல் கோஷ்டி தப்பி ஓட்டம்..

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் 3 இளைஞர்களை டிப்பரில் கடத்திச் சென்று மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அதன் தொடர்ச்சியாக குறித்த 3 இளைஞர்களும் டிப்பர் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டிருக்கின்றனர். 

இளைஞர்களை கடத்திச் செல்லும்போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தின் ஒரு பக்க ரயர் வெடித்துள்ளது. 

அதனை தொடர்ந்து இளைஞர்களை மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிக்கு இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சம்பவத்தை அறிந்து பொலிஸார் உடனடியாக அங்கு சென்ற நிலையில் கடத்தல் கும்பல் இளைஞர்களையும், டிப்பர் வாகனத்தையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளது. 

இதனையடுத்து காயமடைந்த இளைஞர்களை வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார் டிப்பர் வாகனத்தை கைப்பற்றி விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு