கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடிய நபர்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்...

ஆசிரியர் - Editor I
கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடிய நபர்! மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்...

கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியை திருடிக் கொண்டு சென்றவரை மடக்கி பிடித்த பொதுமக்கள், நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதன் பின்னர் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், குறித்த நபர்கள் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி மற்றும் நீர் பம்பிகள் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவர்களிடமிருந்து 3 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 5 நீர் பம்பிகள் மீட்கப்பட்டுள்ளது. 

நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரட்ண நாயக தலைமையிலான பொலிஸ் குழு இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு