இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பும்ரா!! -இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவிப்பு-

ஆசிரியர் - Editor II
இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய பும்ரா!! -இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவிப்பு-

இறுதி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஆட்டமிழக்காமல் ஆடிய அதிரடி ஆட்டத்தினால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்களை குவித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 83 ஓட்டங்களுடனும் சமி ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 2 ஆவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ரிஷப் பண்ட் - ஜடேஜா ஜோடி மேலும் ஒரு சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளாது. 

இந்திய அணி வீரர்களில் ஒரு இன்னிங்சில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் சதம் அடித்த பட்டியலில் பண்ட் - ஜடேஜா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

தொடர்ந்து ஆடிய ஜடேஜா 104 ஓட்டங்களில் ஆண்டர்சன் பந்து வீச்சில் போல்ட் ஆனார். அதனைத் தொடர்ந்து பும்ரா அதிரடியாக விளையாடினார். ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 4 பவுண்டரி 2 சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமனையில் இருந்த சிராஜ் 2 ஓட்டத்தில் ஆண்டர்சன் பந்தில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பும்ரா 16 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு