4 நாட்களாக காணாமல்போயிருந்த 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
4 நாட்களாக காணாமல்போயிருந்த 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

கடந்த சனிக்கிழமை தொடக்கம் காணாமல்போயிருந்த வவுனியா - மகாறம்பைக்குளம பகுதியை சேர்ந்த மூக்கன் சஜீவன் (வயது38) என்ற 3 பிள்ளைகளின் தந்தை வவுனியா - குடியிருப்ப சந்தைக்கு பின்புறம் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

கடந்த சனிக்கிழமை (25 ) காலை வீட்டிலிருந்து சென்றிருந்த நிலையில் மாலையாகியும் வீடு திரும்பவில்லை. அதனையடுத்து அவரை தேடும் பணியில் உறவினர்களுடன் இணைந்து பொதுமக்களும் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் அவர் குறித்து தகவல் கிடைக்காமையினால்  27ம் திகதி பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே நேற்று (29) மாலை குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் பொதுச்சந்தைக்கு பின்புறம் பகுதியில் பொதுமகனொருவர் கழிவகற்றல் நடவடிக்கைக்காக சென்ற சமயத்தில் அப்பகுதியில் சடலமொன்றினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து இவ்விடயம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது காணாமல்போன சஜீவன் என்ற குடும்பஸ்த்தரின் சடலமே அது என உறுதிப்டுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு