மும்பை கட்டட விபத்து!! -பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு-

ஆசிரியர் - Editor II
மும்பை கட்டட விபத்து!! -பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு-

மும்பை - மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டடம் நேற்று இருவு திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள் என்றும், மேலும் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், குர்லா கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு