வீட்டை துளைத்து நின்ற ரஷ்ய ரொக்கெட்;!! -கண்டுகொள்ளாத உக்ரேனியர்-

ஆசிரியர் - Editor II
வீட்டை துளைத்து நின்ற ரஷ்ய ரொக்கெட்;!! -கண்டுகொள்ளாத உக்ரேனியர்-

உக்ரைனில் ரஷ்ய படையகள் வீசிய ரொக்கெட்டின் ஒரு பகுதி வீட்டை துளைத்து நின்ற போதும், அதனைக் கண்டுகொள்ளாமல் நபர் ஒருவர் முகச்சவரம் செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள யுத்தம் 20 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில் உயிர், உடைமைகளை இழந்தாலும் உக்ரைன் மக்கள் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தினமும் வெடிகுண்டுச் சத்தம் கேட்பது மக்களுக்கு பழகிவிட்டது. அதற்கு உதாரணமாக நபர் ஒருவர் முகச்சவரம் செய்த செயல் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ரஷ்ய படைகள் வீசிய ரொக்கெட் ஒன்று வீட்டைத் துளைத்து சமையல் அறையில் செங்குத்தாக நிற்கிறது. எனினும் வீட்டின் உரிமையாளர், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அதன் அருகிலேயே நின்று கண்ணாடியைப் பார்த்து முகத்தை சவரம் செய்து கொண்டிருக்கிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு