இளம்பெண் அடைத்து வைத்துள்ளதாக முறைப்பாடு!! -நித்யானந்தா ஆசிரமத்தில் பொலிஸ் அதிரடி சோதனை-

ஆசிரியர் - Editor II
இளம்பெண் அடைத்து வைத்துள்ளதாக முறைப்பாடு!! -நித்யானந்தா ஆசிரமத்தில் பொலிஸ் அதிரடி சோதனை-

இந்தியாவின் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் 2017 ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளனர். 

2019 ஆம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். இருப்பினும் 2 ஆவது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார்.

அதன்பின் தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக பொலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைப்பாடு செய்தார். 

இருப்பினும் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகே{க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடியுள்ளார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா பொலிஸாரிடம் தனது மகளை மீட்டுத்தருமாறு முறைப்பாடு செய்தார். இந்த முறைப்பாட்டின் பேரில் நேற்று இரவு தாலுகா பொலிஸார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தினர். அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு